ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் நடித்த நாயகன் பிரபாஸ் மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்திற்காக மட்டும் உழைத்து வருகின்றார். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டவிருக்கும் நிலையில் நாயகன் பிரபாஸ் டிசம்பரில் தனது அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இயக்குனர் சுஜீத் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கவுள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கின்றார். பாகுபலி -2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுபெற்ற பின்னர், பிரபாஸ் டிசம்பரில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகின்றது. தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவக்கியுள்ள சுஜீத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேடலிலும் ஈடுபட்டுள்ளாராம்.