சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர், வினோத் குமார் உயிரிழந்த சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆகஸ்ட் 24) கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவின் தொண்டரும் அவரது தீவிர ரசிகருமான வினோத் குமார்(24) பங்கேற்று பேசியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆரை தாக்குவது போல் அமைந்ததாகக் கூறப்படும் வினோத் குமாரின் பேச்சிற்கு, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர் அக்ஷ்ய் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் முற்றி நடந்த கைகலப்பில் அக்ஷ்ய், வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார். நெஞ்சில் காயம்பட்ட வினோத் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அக்ஷ்ய் என்பவரை கைது செய்துள்ளனர்.