ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நஸ்ரியா, மீண்டும் நடிக்க வருவதாக கடந்த வருடம் முழுதும் செய்திகள் அடிபட்டன. அவரது கணவர் பஹத் பாசிலும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் அவரோ வந்தபாட்டை காணோம்.. அவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள் இப்போதும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. அதற்கு உதாரணமாக பேஸ்புக் பக்கத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சொல்லலாம்.
நஸ்ரியா பீக்கில் இருந்த காலகட்டத்தில் பேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் அவரை பின் தொடர்ந்தனர்.. ஆனால் இன்று அது படிப்படியாக 75 லட்சத்து 23 ஆயிரமாக குறைந்துவிட்டது. அதேசமயம் நடிகை மியா ஜார்ஜை பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.. நஸ்ரியாவை விட 33 ஆயிரம் பேர் அதிகமாக மியாவை பின் தொடர்கின்றனர். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து மியா பாப்புலராகிவிட்டதால் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. விரைவில் அவர் தெலுங்கிலும் நுழைய இருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.