ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தியத் திரையுலகத்தில் இதுவரை இப்படி ஒரு சம்பளத்தை யாருக்காவது கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். சிரஞ்சீவி நடித்து வரும் அவருடைய 150வது படமான 'கைதி எண் 150'வது படத்திற்காக பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்களில் 2 பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளாராம். சிரஞ்சீவியே விரும்பிக் கேட்டதால் நடனம் அமைத்துத் தர பிரபுதேவா சம்மதித்திருந்தார். தற்போது அந்த இரண்டு பாடல்களுக்கும் 'மாஸ்டர்' ஆக பணிபுரிவதற்கு பிரபுதேவாவிற்கு 1 கோடி சம்பளம் தர உள்ளார்கள் என டோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடனம் அமைப்பதற்காக இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு சம்பளத்தைத் தந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. படத்தில் இடம் பெறும் அந்த இரண்டு பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட உள்ளதாம். படத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு 'காம்ப்ரமைஸ்' பண்ணாமல் மிகவும் 'ரிச்' ஆக எடுக்க வேண்டும் என்பது சிரஞ்சீவியின் கட்டளையாம். அதை அவருடைய மகனான ராம்சரண் நிறைவேற்றிக் கொடுக்கிறாராம். 'கைதி எண் 150' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.