விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த வாரம் ஜெயசூர்யா நடித்த பிரேதம் மற்றும் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ஆனால் படம் ரிலீசாவதற்கு முன்னாள் மலையாள நடிகர் ஜெயசூர்யாவிடம் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யவேண்டாம் என படித்து படித்து சொன்னார்கள்.. ஏன், ஜெயசூர்யாவே தனது இரண்டு பட தயாரிப்பாளர்களிடமும் இதை வேண்டுகோளாகவே வைத்தார். சொன்னது போலவே தான் இப்போது நடக்கிறது..
ஆம்.. பிரேதம் படம் நல்ல வரவேற்பு, விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு படமான இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் படம் வசூலில் பின்தங்கியே இருக்கிறது. அதேசமயம் பிரேதம் படத்தை பாராட்டியும் தாவூத் இப்ராஹிம் படத்தை விமர்சித்தும் சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரேதம் படம் எப்படியும் ஓடிவிடும் என ஜெயசூர்யாவுக்கு தெரியும்.. ஆனால் அவர் முதன்முதலில் அதிரடி போலீஸ் நாயகனாக நடித்து வெளியான இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் படத்தைதான் ரொம்பவும் எதிர்பார்த்தார். இப்போது பிரேதம் ஹிட்டானதால் சந்தோஷப்படுவதா இல்லை, இன்னொரு பட சுனங்குவதை கண்டு வருத்தப்படுவதா என திரிசங்கு நிலையல் தத்தளிக்கிறாராம் ஜெயசூர்யா.