ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு நடிகராக தன்னை கேரள எல்லைக்குள்ளேயே குறுக்கிக்கொள்ள விரும்பாதவர் பிருத்விராஜ். கதையும் கதைக்களமும் எந்த எல்லைக்கு இழுத்து செல்கிறதோ அங்கெல்லாம் இழுபட்டு செல்வது ஒரு நடிகனின் கடமை என நினைப்பவர். அதனால்தான் கடந்த வருடம் தான் நடித்த 'இவிடே' படம் முழுக்க முழுக்க அட்லாண்டா நாட்டில் படமாக்கப்பட்டபோது சந்தோஷமாக அதை அனுபவித்தார். அந்தப்படம் அட்டர்பிளாப் ஆனபோதும் தான் மலையாள சினிமாவில் இருந்து முதன்முறையாக மாறுபட்டு நடிக்க எடுத்த நேர்மையான முயற்சி என்று சொன்னவர் தான் பிருத்விராஜ். இந்தப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஷ்யாம் பிரசாத்..
அவரது பாசறையில் இருந்து இப்போது இயக்குனராக மாறியுள்ளார் நிர்மல் சகாதேவ் என்பவர். 'இவிடே' படத்தில் இணை இயக்குனராக பணிபுரியும்போது பிருத்விராஜுடன் ஏற்பட்ட நட்பு இப்போது இயக்குனராக மாறியுள்ள இவருக்கு தனது முதல் பட நாயகனாக பிருத்விராஜையே கொடுத்துள்ளது.. தனது குருநாதரை பின்பற்றி இவரும் முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதையையே படமாக உருவாக்க இருக்கிறாராம். அமெரிக்காவின் மெக்ஸிகன் மாகாணத்தில், டெட்ராய்ட் நகரில் உள்ள ஸ்ட்ரீட் கேங்ஸ் பற்றிய கதை தான் இது.. படத்திற்கு 'டெட்ராய்ட் கிராஸிங்' என டைட்டில் வைத்துள்ளனர்.
டெட்ராய்டில் பல்வேறு ஸ்ட்ரீட் கேங்ஸ் இயங்கி வருகின்றன. மெக்ஸிகன் நகர ஸ்ட்ரீட் கேங்ஸ் என தேடிப்பார்த்தால் அது காட்டும் பட்டியலை பார்த்து மிரண்டு போவீர்கள். அங்கே நம் தமிழ் ஆட்களும் தனித்தனியாக ஸ்ட்ரீட் கேங் உருவாக்கி வைத்துள்ளார்களாம்.. இவர்களுக்குள் நடக்கும் மோதல், இந்த கேங் ஒன்றில் இருக்கும் நாயகன் பிருத்விராஜ், இதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.. இது மலையாளப்படம் தான் என்றாலும் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டாலும் கூட ஆச்சர்யமாக தமிழ் சம்பந்தமான விஷயங்கள் தான் படத்தில் நிறைய இருக்கிறதாம். அதனால் படத்தையும் மலையாளம், தமிழ் என இருமொழியில் உருவாக்குகிறார்களாம். அதற்கேற்ப தமிழில் இருந்து சில பிரபல நடிகர்களையும் இந்தப்படத்தில் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்களாம்.