ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் பிரபலம் அமீர்கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதே எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் போன்று தெலுங்கு திரை உலகின் பவர்ஸ்டார் பவன் கல்யாணும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நிகழ்ச்சியை இயக்குவதற்கு தகுதியான இயக்குனரை இதுவரை தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுக்காததாலும் ஏற்பாடுகள் இது வரை துவங்கப்படாததாலும் பவன் கல்யாணே, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பவன் கல்யாணின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் கபார் சிங் திரைப்படம் தோல்வியைத் தழுவியதால் தொலைக்காட்சி நிறுவனமே பவன் கல்யாண் நிகழ்ச்சியை கைவிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.