ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வருடத்தில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய மூன்று படங்களை தொடர்ச்சியாக கொடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார் பிருத்விராஜ். அதில் முதல் ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' பாணியிலே தொடர்ந்து இன்னொரு காதல் காவியமாக வெளியான படம் தான் அனார்கலி'. பிருத்விராஜுடன் பிஜூமேனன் இணைந்து நடித்த இந்தப்படத்தில் பிரியல் கோர் என்கிற வடக்கத்தி நடிகை பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபல கதாசிரியரான சாச்சி, இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தற்போது சாச்சி தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துவிட்டார். படத்தின் ஹீரோ..? வேறு யார்.. சாட்சாத் பிருத்விராஜே தான். 'அனார்கலி' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை அந்தமான் தீவில் நடத்திய சாச்சி, இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஸ்ரீலங்காவிலும், லண்டனிலும் நடத்த இருக்கிறாராம். அதற்கேற்ற மாதிரி படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சிங்கள நடிகை ஒருவரும், லண்டன் பெண் ஒருவரும் நடிக்க இருக்கிறார்களாம். படத்திற்கான கதாநாயகி வேட்டை இப்போது நடக்கிறது.. இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.