விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் உலக புகழ்பெற்ற அப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு விருதுகள் எதுவும் கிடைக்காதது அவரது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லன், இயக்குனர், ஒளிப்பதிவாளர், துணை நடிகை போன்ற பிரிவுகளில் பாகுபலி திரைப்படம் விருது வென்றது. ஆனால் நாயகன் பிரபாஸிற்கு விருது கிடைக்கவில்லை.
அதே போல் பிலிம்பேர், சினிமா போன்ற குறிப்பிடத்தகுந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் தற்போது நடந்த சைமா விருது நிகழ்ச்சியிலும் பிரபாஸிற்கு விருது கிடைக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் பிரபாஸ் இதற்கிடையில் வேறு படங்களில் ஒப்பந்தமாகாமல் மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.