ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், பரேஷ் ராவல் நடித்த ஓ மை காட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் வெங்கடேஷ் நடித்தனர். கோபாலா கோபாலா என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்ட இப்படத்தில் பவன் கல்யாண் கடவுளாக நடித்து அசத்தினார். தற்போது மீண்டும் பவன் கல்யாண் கடவுளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அ.ஆ படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் பவன் கல்யாண் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பவன் கல்யாண் கடவுளாக நடிகின்றார் என செய்திகள் கூறுகின்றன. மேலும் இப்படத்திற்காக திரிவிக்ரம் “தேவுடு திகிவச்சினா” என்ற தலைப்பையும் பதிவு செய்துள்ளாராம். தற்போது இயக்குனர் டோலி இயக்கத்தில் பவன் கல்யாண் நடிகக்வுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பரில் துவங்கும் என தெரிகிறது.