ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
தவறுதல் மனித இயல்புதான்.. ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது என்பது மகத்தான செயல். அதைத்தான் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸும் செய்துள்ளார்.. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காலமான மலையாள திரையுலகை சேர்ந்த கவளம் நாராயண பணிக்கர் என்னும் மூத்த நடிகருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என சொல்லி அவரது மகனான கவளம் ஸ்ரீகுமார் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார் மம்தா... அந்த பதிவு வெறும் 30 செகண்டுகள் மட்டுமே டிவிட்டரில் இருந்தாலும் அதற்குள் பலராலும் பகிரப்பட்டு கண்டனத்துக்கும் ஆளானது..
மம்தாவின் மேல் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் “ஆ..ஊ என்றால் வாய்கிழிய பேசும் மம்தா, இதைக்கூட கவனிக்க முடியாத நிலையிலா இருக்கிறார்” என கொட்டி.. ஸாரி.. திட்டித்தீர்த்தனர். மம்தா உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார். பின் நேற்று இரவு, “கவளம் பணிக்கர் குறித்த பதிவில் தவறுதலாக குறிப்பிட்டதற்கு தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.. 30 செகண்டுகளில் அதை நான் தூக்கிவிட்டாலும் தவறு தவறுதான்” என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.