ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மூன்று வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் தான் 'நீலாகசம் பச்சக்கடல் சுவண்ண பூமி'.. சமீபத்தில் வெளியான 'களி' படத்தை இயக்கிய சமீர் தாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கி இருந்தார்.. இந்தப்படத்தில் துல்கரின் காதலியாக நடித்தவர் பலோமா மொன்னப்பா.. அதன்பின் இவரை எந்தப்படத்திலும் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது துல்கருடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடித்துவருகிறார் என்கிற செய்தியும் அதை உறுதிப்படுத்தும் விதமாக துல்கரும் பலோமாவும் இணைந்துள்ள போட்டோவும் வெளியானது.
அமல் நீரத் இயக்கும் இந்தப்படத்தில் பலோமா தான் கதாநாயகி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் விசாரித்ததில் டிஸ்கவரி சேனலில் 'இந்தியா மை வே' என்கிற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பலோமா, இந்த நிகழ்ச்சியை படம் பிடிப்பதற்காக இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும், அப்படி கேரளா வந்தபோது அமல் நீரத், தான் துல்கரை வைத்து இயக்கும் படத்தின் சில காட்சிகளையும் படம்பிடிக்க சொன்னதாகவும் அதனால் தான் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் துல்கருடன் இணைந்த புகைப்படத்தை பார்த்துத்தான் அவர் துல்கருடன் மீண்டும் நடிக்கிறார் என்கிற தவறான செய்தி பரவிவிட்டதாம்.