ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் லிங்குசாமியின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவியதால் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில் மனம், 24 போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரம் குமார், அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கபார் சிங் படப்புகழ் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 2017 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.