ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல மலையாள நடிகரும் முன்னாள் தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவருமான முகேஷை காணவில்லை என கேரளாவில் கொல்லம் தொகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்துவரும் முகேஷுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ஆசை சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் நிறைவேறியது.. கொல்லம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் முகேஷ்.
ஆனால் கொல்லம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் நேற்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்று, எங்களது எம்.எல்.ஏ முகேஷை அவர் வெற்றிபெற்ற பின்னர் எங்கள் தொகுதிப்பக்கமே பார்க்கமுடியவில்லை.. கடைசியாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது பார்த்ததுதான். அவரை கண்டுபிடித்து தாருங்கள் என மேன் மிஸ்ஸிங் புகார் கொடுத்துள்ளார்களாம். தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.. அதற்குள்ளாகவே எதிராளிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் முகேஷ்.