தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
சின்ன ரோல், பெரிய ரோல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்க தெரியாது மலையாள நடிகை அனுஸ்ரீக்கு.. ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்வதாக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.. அந்த தைரியம் தான் 'இதிகாசா' படத்தில் பெண்ணாக இருந்துகொண்டே ஆணாக அவரை நடிக்க வைத்தது.. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் பஹத் பாசிலை உருகி உருகி காதலித்துவிட்டு, அப்பா பார்த்த கவர்மென்ட் மாப்பிளையை திருமணம் செய்துகொண்டு போகும் கேரக்டரில் எளிதாக பொருந்த வைத்தது. அந்த துணிச்சல் தான் இப்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஒப்பம்' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரையும் வாங்கி தந்துள்ளது.
மலையாள நடிகைகளை பொறுத்தவரை இரண்டு ஆசைகள் அவர்களுக்கு நிச்சயம் உண்டு. ஒன்று மோகன்லாலுடன் நடிக்க வேண்டும்.. இன்னொன்று போலீஸ் வேடத்தில் நடிக்கவேண்டும். இது இரண்டுமே அனுஸ்ரீக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது போல ஒரே படத்தில் கிடைத்துவிட்டது தான் ஆச்சர்யம். இந்தப்படத்தில் புதிதாக பொறுப்பேற்ற அசிஸ்டன்ட் கமிஷனர் வேடத்தில் நடித்துள்ளார் அனுஸ்ரீ.