ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் கலாபவன் மணியின் உடல்கூறு ஆய்வு அறிக்கையை ஐதராபாத் தடயவியல் துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில், கலாபவன் மணி குடிந்த மதுபானத்தில் மீத்தைல் ஆல்கஹால் என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசாயன பொருள் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது எனவும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்த ரசாயனம் கொடுக்கப்பட்டதாலேயே கலாபவன் மணி உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் வெளியிடப்பட்ட இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கைகளில் ஒன்றில் கலாபவன் மணி பூச்சி மருந்து கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொன்றில் மீத்தைல் ஆல்கஹால் கொடுத்தே கலாபவன் மணி கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காகவே கேரள போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐதராபாத் தடயவியல் ஆய்வாளர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர். இதில் விஷதன்மை கொண்ட ரசாயன பொருள் கொடுத்து கலாபவன் கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.