ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களிலும் நடித்துக் கொண்டு செமத்தியாய் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் சூர்யாவுடன் எஸ் 3 படத்திலும், தனது அப்பா கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்திலும் நடித்து வருகிறார். இவை தவிர, 'பிரேமம்' மலையாளப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஹிந்தியில் 'யாரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் 4 படங்களை தற்போது கையில் வைத்திருக்கும் ஸ்ருதி, லேட்டஸ்ட்டாக மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பவன் கல்யாணை கதாநாயகனாக வைத்து எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கவிருக்கும் படம்தான் அது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சமீபத்தில் பூஜை நடைபெற்றது. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அனுப் ரூபன் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் ஆரம்பமாகிறது.
இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இரண்டு கோடி சம்பளம் என்றதும் மற்ற படங்களுக்குக் கொடுத்த தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்துள்ளார் ஸ்ருதி. ஏற்கெனவே பவன் கல்யாணுடன் 'கப்பார் சிங்' படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி.