ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா மாநிலம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த சட்டக்கலூரி மாணவியான ஜிஷா என்பவர் சில மனித மிருகங்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட டில்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இணையாக இதை அனைவரும் குறிப்பிடுகிறார்கள். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகே வெளியே தெரியவந்துள்ள இந்த கொடூரத்திற்கு எதிராக மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனக்குரல் கொடுத்து வருகிறார்கள். இப்போது நடிகர் பிருத்விராஜும் தனது முகநூலில் இதுபற்றி கொந்தளித்துள்ளார்..
“இதுபோல சம்பவம் இன்று மட்டும் தான் நடக்கிறது என நினைக்கிறீர்களா..? சாதாரண செய்தித்தாளில் ஏதோ ஒரு பக்கத்தில் 3க்கு 4 என்கிற செய்தியாக அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. அனைவருமே இது டில்லியில் தானே நடந்தது.. நமக்கு நடக்கவில்லையே... பெரும்பாவூரில் தானே நடந்தது.. நம் வீட்டில் உள்ளவருக்கு நடக்கவில்லையே என விலகுகிறோம். ஒவ்வொருமுறை இப்படி கொடூரம் நிகழும்போதும் அடுத்தமுறை இப்படி நிகழ்ந்தால் பார்த்துக்கொள்வோம் என ஒதுங்குகிறோம். ஏன் அடுத்தமுறை..? இந்தமுறை ஏதும் செய்யக்கூடாதா..? செய்ய முடியாதா..? தயவுசெய்து மௌனத்தை கொன்று அநீதிக்கு எதிராக போராட வெளியே வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.