ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மிக ஆவலாக இருந்த ரசிகர்களின் மனதில் ஏமாற்ற விதையை தூவியுள்ளார் நடிகை (பேபி) ஷாமிலி.. ஆம்.. மலையாளத்தில் இவர் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள 'வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி' படம் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் வரும் மே-6ஆம் தேதிக்கு இப்போது அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால் படம் ரிலீஸுக்கு தயாராகவில்லை என தாமதத்திற்கு காரணம் சொல்லப்படுகிறது. இன்னொரு தரப்பினரோ கடந்த சில நாட்களாகவே கேரள சினிமா எக்சிபிடர்ஸ் சங்கத்தினர் நடத்திவரும் ஸ்ட்ரைக்கால் தான் படம் வெளியாகவில்லை என்று சொல்கிறார்கள்..
இந்தப்படத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால் ஷாமிலியின் அக்கா ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானபோது யாருக்கு ஜோடியாக நடித்தாரோ அதே குஞ்சாக்கோ போபன் தான் ஷாமிலிக்கும் முதல் ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரிஷி சிவக்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் நடிப்பதற்காகத்தான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தனுஷின் 'கொடி' படத்தில் இருந்து ஷாமிலி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.