ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா பிரபலங்களில் சிலர் தங்களுக்குள் மனமொத்து வாழ முடியாமல் விவாகரத்து பெறுவது வாடிக்கையான நிகழ்வுதான். அதன்பின் அவர்களில் சிலர் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து இன்னொரு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் உண்டு. ஆனால் மலையாள நட்சத்திர தம்பதிகளாக இருந்து இப்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழும் நடிகர் திலீப்பும் மஞ்சு வாரியரும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசப்படவே செய்கின்றனர். இவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மறு திருமணத்திற்கு முயற்சி செய்யவில்லை. அப்படி செய்வதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையாம்.
அதேபோல ஒருவர் மற்றவரை தாக்கி எங்கும் பேசுவதும் இல்லை.. பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதை கூட முன்கூட்டியே அறிந்து தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மறைந்த நடிகர் ரத்தீஷின் மகள் பத்மாவின் திருமணத்தில் இருவருமே கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.. காரணம் மணப்பெண் பத்மா இவர்கள் இருவரையும் தனது சகோதர, சகோதரி ஸ்தானத்தில் வைத்து அன்பு செலுத்துபவர். அதனால் திருமண நிகழ்வின்போது இருவரும் அருகருகே நெருங்கி வந்து மணமக்களை வாழ்த்திய தருணத்திலும் கூட ஒருவரை ஒருவர் பார்க்காததுபோல நாசூக்காக விலகிவிட்டார்கள்.. திருமணத்திற்கு வந்திருந்த பலரும் இவர்கள் இருவரும் ஏதாவது பேசுவார்கள் என எதிர்பார்த்து ஏமாற்றமே அடைந்தார்களாம்.