ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நேற்று முன் தினம் மலையாள தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டது தான் மலையாள திரையுலகின் பரபரப்பான செய்தி. 29 வயதான அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து அதற்கு காரணமாக பலவித வதந்திகள் செய்திகளாக உருமாறி சுழன்றடிக்கின்றன. அதில் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது தான் அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்பது.. அவர் தயாரித்த படத்தின் பரிவ்யூ பார்த்ததாகவும் படம் நன்றாக வரவில்லை என தெரிந்துகொண்டதாகவும் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த அவர் இந்தப்படமும் ஓடாமல் இன்னும் கடனாளி ஆகிவிடுவோமோ என நினைத்து அந்த பயத்தில் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் இப்போது அடுத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது..
இதை வன்மையாக கண்டித்துள்ளார் படத்தின் இயக்குனரான சனில் முகம்மது. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு மனிதர் இறந்தபின் அவரைப்பற்றி வதந்திகளை பரப்புவது அழகல்ல.. முதலில் இன்னும் எங்களது படத்தின் எடிட்டிங்கே முடியவில்லை.. எடிட்டிங் முடியாததால் மற்ற பணிகளை தொடங்கவே இல்லை.. அப்புறம் எப்படி அவர் ப்ரிவியூ பார்த்திருக்க முடியும்.. அதுமட்டுமல்ல, அவர் என்னுடைய நல்ல நண்பர்.. இந்தப்படம் முடிந்ததும் அடுத்ததாக இன்னொரு படத்தை தயாரிக்கும் ஐடியாவையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால் அவர் பொருளாதார, கடன் பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்லப்படுவது தவறு.. உணமி என்வென்று வெளியாகும்வரை யாரும் வதந்திகளை பரப்பாமல் இருந்தாலே போதும்” என கூறியுள்ளார்.