ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இன்னும் உறுதிப்படுத்தப்படாமலும், அதேசமயம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த மறுப்பும் வெளியாகமலும் உலவிக்கொண்டு இருக்கும் செய்திதான் மணிரத்னத்தின் புதிய படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிப்பதும் அவருக்கு ஜோடியாக 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நடிப்பதும். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்து பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் அவர் ஒதுங்கிக்கொண்ட தகவல் கூட கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டது தான்.. ஆனால் துல்கருக்காவே எழுதப்பட்ட இந்த கதையில் கார்த்தி நடிப்பது என்பது இனிமேல் உறுதியான தகவலாக வெளிப்படும் என நம்பலாம்.
அதேசமயம் கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பது உறுதிதான் என்று சொல்லப்படுகிறது.. காரணம் இந்தப்படத்திற்கு கிட்டத்தட்ட தமிழுக்கு புதுமுகமாக அதேசமயம் தமிழ் பேசத்தெரிந்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என மணிரத்னம் நினைத்தாராம்.. அந்த சமயத்தில் தான் அவரது மனைவி நடிகை சுஹாசினி, மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தை பார்த்துள்ளார். படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்களை கிறங்கடித்த சாய் பல்லவி, சுஹாசினியையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது. அதன் பின் தான் தனது கணவரின் படத்திற்கான புது ஹீரோயின் தேடலை அறிந்து சாய் பல்லவியை பற்றி கூறி அவர்தான் பொருத்தமாக இருப்பார் என வாதாடினாராம் சுஹாசினி. மணிரத்னமும் சாய் பல்லவியை வரவழைத்து ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அவருக்கும் திருப்தியாம். அதன்பின் தான் அவரை நாயகியாக ஒகே செய்தாராம் மணிரத்னம்.