ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நான் ஈ, வெப்பம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் நானி தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். பலே பலே மகாதேவோ படத்தின் வெற்றிக்கு பின்னர், கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள கிருஷ்ணகாடி வீர ப்ரேம கதா படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட நானி, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
மணிரத்னம் தயார் செய்து வைத்த கதையைச் சார்ந்து பாலிவுட்டில் ஒரு படம் வெளியிடப்பட்டதாலும், அப்படத்திற்கும் மணிரத்னம் படத்திற்கும் அதிக ஒற்றுமைகள் இருந்ததாலும் அப்படத்தை மணிரத்னம் கைவிட்டதாக நாணி கூறியுள்ளார். ஓகே கண்மணி படத்தின் தெலுங்கு மொழிமாற்றத்தில் துல்கருக்கு குரல் கொடுத்த நானி, விரைவில் மணிரத்னம் இயக்கத்திலும் நடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.