ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
டெம்பர், ரேஸ் குர்ராம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு திரைக்கதை எழுதிய வக்கந்தம் வம்சி நீண்ட நாட்களாக இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆருக்கு என ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து அவரிடம் கூறினார். அக்கதையைக் கேட்டு பிடித்துப் போக ஜுனியர் என்.டி.ஆரும் தனது சகோதரர் கல்யாண் ராம் தயார்ப்பில் அப்படத்தில் நடிப்பதாக வம்சியிடம் கூறியுள்ளார். ஆனால் இது வரை படப்பிடிப்பை துவங்குவது குறித்து வம்சியிடம் ஜுனியர் என்.டி.ஆர் எதுவும் கூறவில்லையாம்.
நானாகு பிரேமதோ படத்திற்கு பின்னர் தனது படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பார் என வம்சி எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரச் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் தயாரிக்கவுள்ள படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக கடந்த மூன்று வருடமாக வம்சி படத்தில் நடிக்காமல் ஜுனியர் என்.டி.ஆர் காலம் கடத்தி வருகின்றாராம்.