விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து தேசிய விருது பெற்ற வித்யாபாலன், அடுத்து முன்னாள் பிரமதர் இந்திராவாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர் பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரையாவாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தின் பிரபல எழுத்தாளரான கமலா பிற்காலத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி சுரையாகவாக வாழ்ந்தார். மாதவிக்குட்டி என்ற தலைப்பிலும், என் கதை என்ற தலைப்பிலும் அவர் எழுதிய சுயசரிதையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
முதல் மலையாளப்படத்தை இயக்கிவரும், மலையாள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிற வருமான ஜே.சி.டேனியல் கதையை இயக்கிய கமல் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். "கமலா சுரையா படத்தின் ஸ்கிரிப்டை மூன்று பகுதியாக எழுதி முடித்துவிட்டேன். அவர் கேரக்டரில் வித்யாபாலன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரிடம் கதை சொன்னேன். நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை" என்கிறார் இயக்குனர் கமல்.