சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
அனுஷ்காவின் அதிரடி நடிப்பில் கடந்த வெள்ளியன்று ஆந்திராவில் வெளியாகியிருக்கும் படம் ராணி ருத்ரமா தேவி. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலுமே வசூல் மழை பொழிந்து கொண்டிருப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, இதற்கு முன்பு அனுஷ்காவை பிரதானப்படுத்தி உருவான படங்களின் வசூல்களை இந்த படம் கண்டிப்பாக முறியடித்து விடும் என்கிறார்கள்.
மேலும், வருகிற 16-ந்தேதி அன்று ராணி ருத்ரமா தேவி தமிழகத்தில் வெளியாகிறது. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சில மாநிலங்களிலும் வெளியாகியிருக்கும் அப்படம் முதல் நாள் மட்டும் 20 கோடி வசூலித்துள்ளதாம். இந்நிலையில் அப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான், அனுஷ்காவுக்கும் நித்யாமேனனுக்கும் திருமணம் நடக்கும் ஒரு காட்சியும் அப்படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
கதைப்படி, அனுஷ்கா பெண் என்றபோதும் அதை ஊர் உலகத்துக்கு தெரியாமல் அவரை ஆண்மகன் போலவே வளர்த்து வருவார்களாம். ஒரு ஆண் கற்றுக்கொள்ளும் அனைத்து போர்ப்பயிற்சிகளையும் சிறுவயதிலேயே பயிலும் அனுஷ்காவிடம் ஆண்மைத்தனமே நிறைந்திருப்பதால் அவர் பெண் என்கிற சந்தேகம் யாருக்குமே வராதாம். இந்த நிலையில், ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு நித்யாமேனனை திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். அதன்பிறகு அனுஷ்காவும் ஒரு பெண்தான் என்பது நித்யாமேனனுக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதை சுவராஸ்யமாக படமாக்கியிருக்கிறார்களாம்.