ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி-நயன்தாரா-அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். தமிழில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் தொடங்கி விட்டது. அந்த வகையில், தெலுங்கில் இப்படத்தின் நாயகனாக ராம்சரணும், வில்லனாக ராணா அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஆனால், நாகார்ஜூனா, ராணா இருவருமே வில்லனாக நடிக்க மறுத்து விட்டார்களாம். பாகுபலியில் வில்லனாக நடிக்கும் ராணா அதை காரணம் காட்டி இந்த படத்தை தவிர்த்து விட்டநிலையில், நாகார்ஜுனாவோ ஹீரோ மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போது எதற்காக வில்லனாக நடிக்க வேண்டும் என்று தவிர்த்து விட்டாராம்.
அதனால் அடுத்தகட்ட முயற்சியாக இப்போது அலைபாயுதே மாதவனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இன்னமும் முடிவு சொல்லாதபோதும் கண்டிப்பாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்களாம். காரணம், தமிழில் தனிஒருவன் படத்தின் கதையை ரெடி பண்ணிட்டு அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் மாதவனைத்தான் டைரக்டர் மோகன்ராஜா கேட்டுக்கொண்டாராம். கதையைக்கேட்ட அவருக்கு பிடித்து விட்டபோதும், இந்தி படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் முடியாமல் போய் விட்டதாம். அதனால்பிறகுதான் அரவிந்த்சாமியை கமிட் பண்ணியிருக்கிறார்கள். அதனால் மாதவனின் முடிவு தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் வேலைகளை தொடங்கி விட்டார்களாம்.