மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மாட்டிறைச்சி விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதாக ஜம்மு காஷ்மீரில் சட்டசபைக்குள்ளேயே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ மற்ற சில ஏம்.எல்.ஏக்களால் தாக்கப்பட்டுள்ள கொடுமையும் நடந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தீபா நிஷாந்த் என்கிற பேராசிரியை ஒருவர் கல்லூரிக்குள் மாட்டிறைச்சி கொண்டுவரப்படுவதையும் உண்பதையும் தடைசெய்ய வேண்டும் என்கிற அறிவிப்புக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பினார்..
கல்லூரி என்பது கோவில் போல.. இதற்குள் மாட்டிறச்சியை நாம் அனுமதிக்க கூடாது என இப்போது சொல்பவர்கள், நாளை மாதவிலக்கான பெண்கள் கூட கல்லூரிக்குள் வரக்கூடாது என்றும் சொல்வார்கள். அடுத்து பின்தங்கிய வகுப்பினர் கல்லூரிக்கு வரக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு இது நீளும்” என பகிரங்கமகா குற்றம் சாட்டியுள்ளார். இப்படி கூறியதற்காக கல்லூரி நிர்வாகம் அவரை கண்டித்துள்ளது. சில மாணவர்களும் அவருக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள்.
ஆனால் பலர் ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்களில் மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவும் ஒருவர்.. சமூகப்பிரச்சனைகளில் தொடர்ந்து நல்லவர்கள் பக்கம் தனது ஆதரவை வழங்கிவரும் ஆஷிக் அபு, “ இந்த வயதில் தான் மனிதாபிமானம், ஞானம், தர்க்கம் என எல்லா அம்சங்களும் வெளிப்படும். எதிர்ப்பு கண்டு பயந்துவிடாதீர்கள்.. கேரளா உங்கள் பக்கம் தான் இருக்கிறது” என அவரது செயலை ஊக்கப்படுத்தி தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.