பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அங்கிருந்த யானை தந்தங்களை எடுத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த சமூகநல ஆர்வலர் ஜேம்ஸ் மாத்யூ என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கேரள அரசு யானை தந்தங்களை மோகன்லால் வைத்திருக்க உரிமம் வழங்கியிருப்பதாகவும், அது மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்து நடிகர் மோகன்லாலுக்கு யானை தந்தங்களை வைத்திருக்க உரிமம் வழங்கி இருந்தாலும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அது ஏற்புடையது அல்ல.
அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதனை முறைப்படி அரசாணையாக வெளியிட வேண்டும். அதை செய்ய தவறியதால், மாநில அரசு வழங்கிய இந்த உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் இந்த வழக்கு மோகன்லாலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.