நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் தமிழகத்தை விட அதிகமாக இருக்கும். ஆந்திரா, தெலுங்கானாவில் புதிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரத்திற்காவது கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கும். கர்நாடகாவில் 900, 1000 வரை டிக்கெட் கட்டணங்கள் இருக்கும். இதைக் குறைக்க கர்நாடகா அரசு முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டது.
அதனடிப்படையில் சிங்கிள் தியேட்டர்களிலும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 200 ரூபாயும், 75 இருக்கைகள் கொண்ட பிரிமியம் தியேட்டர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளித்து அரசாணை பிறப்பித்தது. நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்தது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து தற்போது 236 ரூபாய் அதிகபட்ச கட்டணமாக உள்ளது. ஆன்லைன் இணையதளங்கள், தியேட்டர் கவுன்டர்கள் ஆகியவற்றில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது.
இந்த டிக்கெட் கட்டணக் குறைப்புக்கு ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர்.