சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
1980களில் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாலச்சந்திர மேனன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என சினிமாவில் அனைத்து துறைகளிலும் இவர் முத்திரை பதித்துள்ளார். 'மலையாளத்தின் பாக்யராஜ்' என்று போற்றப்பட்டார். தற்போது அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் மீனு முனீர் என்ற நடிகை இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் பலாத்கார புகார் கொடுத்தார். பாலச்சந்திரமேனன் இயக்கி நடித்த, 'தே இங்கோட்டு நோக்கியே' என்ற படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும், படப்பிடிப்பு நாட்களில் ஓட்டலுக்கு வரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகை மீனு முனீரும், அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திர மேனன் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து நடிகை மீனு முனீர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை மீனு முனீரை கொச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.