ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி |

கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. ஹனிப் அதேனி இயக்கிய இந்த படம் அதீத வன்முறை காட்சிகள் மற்றும் அதிரடியான ஏழு சண்டை காட்சிகள் கொண்ட படமாக உருவாக்கப்பட்டிருந்தது. குடும்பத்துடன் பார்க்க முடியாத படம் என்றாலும் கூட இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி வசூலையும் ஈட்டியது.
அதேசமயம் தற்போது ஒரு பக்கம் கேரள முதல்வர் இந்த படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளது ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால், ஏற்கனவே இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது ஓடிடியில் வெளியான நிலையில் அந்த ஒளிபரப்பு உரிமையும் ரத்து செய்யப்படுமோ என்கிற சூழல் உருவாகியுள்ளது. இதனால் படம் பல கோடி வசூலித்தாலும் கூட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத சங்கடத்திற்கு ஆளாகி இருக்கிறார் மார்கோ படத்தின் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “இந்த படம் வன்முறையை ஆதரிக்கும் படம் இல்லை. ஒரு கதை சொல்லும் முறை.. அவ்வளவுதான்.. இதற்கு முன்பும் கூட இதே போன்று வன்முறை காட்சிகள் நிறைந்த படங்கள் எச்சரிக்கை வாசகங்களுடன் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் மார்கோ படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற வன்முறை படங்களை நான் ஒருபோதும் தயாரிக்க மாட்டேன் என உறுதியாக கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களில் ஏற்பட்ட பாதிப்பு, கேரள முதல்வரின் கடும் எதிர்ப்பு ஆகியவை தான் அவரை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.