நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். 2017ல் திருமணம் செய்துகொண்ட பிறகு சில நாட்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் மீண்டும் 2021 முதல் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் விராட பருவம், கஸ்டடி ஹிந்தியில் ஜவான் ஆகிய படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த பிரியாமணி கடந்த 2023ல் மலையாளத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான நேர் படத்தில் கூட நெகடிவ் சாயல் கொண்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் ஹிந்தியில் ‛ஆர்ட்டிகிள் 70, மைதான்' என பிரியாமணி நடித்த படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக மலையாளத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‛ஆபிஸர் ஆன் டூட்டி' என்கிற படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்து அஷரப் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகனாக குஞ்சாக்கோ கோபன் நடித்துள்ளார். நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் பின்னணியில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் வகையில் ஒரு அதிரடி போலீஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.