பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் |

நடிகர் பிருத்விராஜ் முதன்முறையாக டைரக்ஷன் துறையில் அடி எடுத்து வைத்து மோகன்லால் வைத்து கடந்த 2019ல் இயக்கிய படம் 'லூசிபர்'. அரசியல் பின்னணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது பிருத்விராஜ் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தை இயக்கி முடித்துவிட்டார். மோகன்லாலை முதன்முறையாக 'மனசில் விரிஞ்ச பூக்கள்' என்கிற படத்தில் அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர் பாசில், முதல் பாகத்தில் பாதர் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மோகன்லால் இயக்குனர் பாசில் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எனது குருநாதர் பாசில். அவரது குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு மேலாக நெருங்கிய உறவு நீடித்து வருகிறது. அவர் இயக்கத்தில் நான் பல படங்களில் நடித்து விட்டேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை லூசிபர் படத்தில் நிறைவேறியது. தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தோம். அவருடன் மீண்டும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.




