தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு முறைகேடாக பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வெளியானதை அடுத்து கடந்த மாதம் பெல்லாரியில் உள்ள சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமினுக்காக விண்ணப்பித்துள்ளார் தர்ஷன். இந்த நிலையில் சிறையில் தர்ஷன் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவதாகவும் இன்னொருத்தர் உதவியுடன் தான் நிற்கவும் நடக்கவும் முடிகிறது என்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டால், தன்னை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என தர்ஷன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.