சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் அவருக்கு முறைகேடாக பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வெளியானதை அடுத்து கடந்த மாதம் பெல்லாரியில் உள்ள சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமினுக்காக விண்ணப்பித்துள்ளார் தர்ஷன். இந்த நிலையில் சிறையில் தர்ஷன் கடுமையான முதுகு வலியால் அவதிப்படுவதாகவும் இன்னொருத்தர் உதவியுடன் தான் நிற்கவும் நடக்கவும் முடிகிறது என்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டால், தன்னை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என தர்ஷன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.