ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

நடிகை அனுஷ்கா நடித்த படம் வெளியாகி ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தான் தெலுங்கில் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி டைரக்ஷனில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛காட்டி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ராணாவும் அனுஷ்காவும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ராணா அனுஷ்காவிடம் அவரது ‛அருந்ததி, பாகுபலி', தற்போது ‛காட்டி' ஆகிய படங்களை சுட்டிக்காட்டி எப்போதுமே இது போன்ற கதைகளில் நடிப்பது யார் என்றால் முதல் சாய்ஸாக நீங்கள் இருக்கிறீர்களே.. எப்படி ?” என்று கேட்க அதற்கு அனுஷ்கா, “எனக்கே தெரியவில்லை. நான் கூட இது ஏன் என்று நினைக்கிறேன் ?”. என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அது மட்டுமல்ல காட்டி படத்தின் இயக்குனர் கிரிஷிடம் பேசிக் கொண்டிருந்த போது கூட, 'ஆண்களில் அடிதடி ஹீரோ மாதிரி நானும் ஒரு அடிதடி பெண்ணாக இருக்க முடியுமா என்று கேட்டேன்” என்று கூறினார்.
உடனே ராணா, 'இதுபோன்ற கதைகளுக்கு உங்களைத் தவிர அவர்கள் யாரை தேர்வு செய்து விட முடியும் ?” என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இயக்குனர் கிரிஷ் குறித்து அனுஷ்கா கூறும்போது, “அவரால் மட்டுமே இது போன்ற தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுக்க முடியும். வேதம் படத்தில் அவர் கொடுத்த சரோஜா என்கிற கதாபாத்திரம் என்னுடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று” என்று கூறியுள்ளார்.