இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் |

நடிகை அனுஷ்கா நடித்த படம் வெளியாகி ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தான் தெலுங்கில் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி டைரக்ஷனில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛காட்டி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ராணாவும் அனுஷ்காவும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ராணா அனுஷ்காவிடம் அவரது ‛அருந்ததி, பாகுபலி', தற்போது ‛காட்டி' ஆகிய படங்களை சுட்டிக்காட்டி எப்போதுமே இது போன்ற கதைகளில் நடிப்பது யார் என்றால் முதல் சாய்ஸாக நீங்கள் இருக்கிறீர்களே.. எப்படி ?” என்று கேட்க அதற்கு அனுஷ்கா, “எனக்கே தெரியவில்லை. நான் கூட இது ஏன் என்று நினைக்கிறேன் ?”. என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அது மட்டுமல்ல காட்டி படத்தின் இயக்குனர் கிரிஷிடம் பேசிக் கொண்டிருந்த போது கூட, 'ஆண்களில் அடிதடி ஹீரோ மாதிரி நானும் ஒரு அடிதடி பெண்ணாக இருக்க முடியுமா என்று கேட்டேன்” என்று கூறினார்.
உடனே ராணா, 'இதுபோன்ற கதைகளுக்கு உங்களைத் தவிர அவர்கள் யாரை தேர்வு செய்து விட முடியும் ?” என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இயக்குனர் கிரிஷ் குறித்து அனுஷ்கா கூறும்போது, “அவரால் மட்டுமே இது போன்ற தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுக்க முடியும். வேதம் படத்தில் அவர் கொடுத்த சரோஜா என்கிற கதாபாத்திரம் என்னுடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று” என்று கூறியுள்ளார்.