‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
நடிகை அனுஷ்கா நடித்த படம் வெளியாகி ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தான் தெலுங்கில் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி டைரக்ஷனில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛காட்டி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ராணாவும் அனுஷ்காவும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ராணா அனுஷ்காவிடம் அவரது ‛அருந்ததி, பாகுபலி', தற்போது ‛காட்டி' ஆகிய படங்களை சுட்டிக்காட்டி எப்போதுமே இது போன்ற கதைகளில் நடிப்பது யார் என்றால் முதல் சாய்ஸாக நீங்கள் இருக்கிறீர்களே.. எப்படி ?” என்று கேட்க அதற்கு அனுஷ்கா, “எனக்கே தெரியவில்லை. நான் கூட இது ஏன் என்று நினைக்கிறேன் ?”. என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அது மட்டுமல்ல காட்டி படத்தின் இயக்குனர் கிரிஷிடம் பேசிக் கொண்டிருந்த போது கூட, 'ஆண்களில் அடிதடி ஹீரோ மாதிரி நானும் ஒரு அடிதடி பெண்ணாக இருக்க முடியுமா என்று கேட்டேன்” என்று கூறினார்.
உடனே ராணா, 'இதுபோன்ற கதைகளுக்கு உங்களைத் தவிர அவர்கள் யாரை தேர்வு செய்து விட முடியும் ?” என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இயக்குனர் கிரிஷ் குறித்து அனுஷ்கா கூறும்போது, “அவரால் மட்டுமே இது போன்ற தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுக்க முடியும். வேதம் படத்தில் அவர் கொடுத்த சரோஜா என்கிற கதாபாத்திரம் என்னுடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று” என்று கூறியுள்ளார்.