காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நடிகை அனுஷ்கா நடித்த படம் வெளியாகி ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தான் தெலுங்கில் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி டைரக்ஷனில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛காட்டி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ராணாவும் அனுஷ்காவும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ராணா அனுஷ்காவிடம் அவரது ‛அருந்ததி, பாகுபலி', தற்போது ‛காட்டி' ஆகிய படங்களை சுட்டிக்காட்டி எப்போதுமே இது போன்ற கதைகளில் நடிப்பது யார் என்றால் முதல் சாய்ஸாக நீங்கள் இருக்கிறீர்களே.. எப்படி ?” என்று கேட்க அதற்கு அனுஷ்கா, “எனக்கே தெரியவில்லை. நான் கூட இது ஏன் என்று நினைக்கிறேன் ?”. என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அது மட்டுமல்ல காட்டி படத்தின் இயக்குனர் கிரிஷிடம் பேசிக் கொண்டிருந்த போது கூட, 'ஆண்களில் அடிதடி ஹீரோ மாதிரி நானும் ஒரு அடிதடி பெண்ணாக இருக்க முடியுமா என்று கேட்டேன்” என்று கூறினார்.
உடனே ராணா, 'இதுபோன்ற கதைகளுக்கு உங்களைத் தவிர அவர்கள் யாரை தேர்வு செய்து விட முடியும் ?” என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இயக்குனர் கிரிஷ் குறித்து அனுஷ்கா கூறும்போது, “அவரால் மட்டுமே இது போன்ற தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களை கொடுக்க முடியும். வேதம் படத்தில் அவர் கொடுத்த சரோஜா என்கிற கதாபாத்திரம் என்னுடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று” என்று கூறியுள்ளார்.