ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகர் பஹத் பாசில், சமீப வருடங்களில் விக்ரம், புஷ்பா 2, மாமன்னன், வேட்டையன் என தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்புத் திறமையால் தென்னிந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக மாறிவிட்டார்.
சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த வேட்டையன் படம் வெளியான நிலையில் கடந்த வாரம் மலையாளத்தில் அமல் நீரத் டைரக்சனில் குஞ்சாக்கோ போபனுடன் அவர் இணைந்து நடித்த போகன்வில்லா என்கிற படமும் வெளியானது. இதைத் தொடர்ந்து பஹத் பாசில் வில்லனாக நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படமும் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் பஹத் பாசில். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் லால் ஜோஸ் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் கே.என் பிரசாந்த் என்பவர் எழுதிய 'பொணம்' என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக இருக்கிறது. குறிப்பாக கேரள கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நடக்கும் ஒரு பழி வாங்கும் கதை பின்னணியில் இது உருவாக இருக்கிறதாம். இதற்கு முன்னதாக 2013ல் லால் ஜோஸ் இயக்கிய இம்மானுவேல் என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் பஹத் பாசில். அந்த வகையில் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது டைரக்சனில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.