சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நடிகர்கள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையாள திரையுலகின் பிரபல குணசத்திர நடிகரான அலான்சியர் லே லோபஸ் என்பவர் மீது இளம் நடிகை ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அலான்சியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மகேஷிண்டே பிரதிகாரம் படம் மூலமாக பிரபலமானவர்களில் நடிகர் அலான்சியர் லேவும் ஒருவர். அதனை தொடர்ந்து பிசியான குணச்சித்திர நடிகராக மாறிய இவர் மீது கடந்த 2019ல் இளம் நடிகை ஒருவர், இவருடன் இணைந்து நடித்தபோது படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் என அப்போது பிரபலமாக இருந்த மீ டூ பிரசாரம் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆரம்பத்தில் அதை நடிகர் அலான்சியர் லே மறுத்தாலும் பின்னர் ஒரு பிரபல நாளிதழ் மூலமாக சம்பந்தப்பட்ட நடிகையிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டார். அத்துடன் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த நடிகை, அலான்சியர் லே மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து புகாரில் அந்த நடிகை கூறும்போது, “கடந்த 2017ல் அலான்சியர் லேவுடன் நடித்தபோது படப்பிடிப்பில் எனக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். அது தொடர்பாக அப்போது மலையாள நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த பொதுச்செயலாளர் இடவேள பாபுவிடம் உடனடியாக இது குறித்து புகார் அளித்தேன். ஆனால் அப்போது அதை அவர்கள் பெரிதாக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட நடிகர் உங்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பார். இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டேன். அப்படி அவர் மன்னிப்பு கேட்டாலும் என் மனதில் அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் தற்போது அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.