பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ஆடுஜீவிதம் திரைப்படம் சீரியஸான கதை அம்சத்துடன் வெளியாகி இருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக குருவாயூர் அம்பலநடையில் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு நோபடி (Nobody) என்று டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் மிஸ்டரி திரில்லர் படமாக வெளியான ரோஷாக் படத்தை இயக்கிய இயக்குனர் நிசாம் பஷீர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் பிரித்விராஜும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.




