சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் அவரது காதல் மனைவி நடிகை சமந்தா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யா காதலில் விழுந்துள்ளதாக பலமுறை பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெகு விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருக்கிறது.
அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா ஜோடி 2027க்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் அதற்கும் ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் ஜோதிடம் கணித்துக் கூறியது சலசலப்பையையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண்கள் உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஜோதிடரின் மனைவியான வீணா என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நாகசைதன்யா-சோபிதா ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததற்காக நாகசைதன்யா தனக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை தர வேண்டும் என்று பகிரங்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். தனது கணவரின் சர்ச்சை பேச்சை திசை திருப்பி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவர் இப்படி நாகசைதன்யாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பேசி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.