பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தித் திரையுலகத்திற்கு அடுத்து அதிக வருவாயை ஈட்டும் திரையுலகம் தெலுங்குத் திரையுலகம். 90கள் வரையிலும் சென்னையில்தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. அதுவரையில் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் சென்னையில் உள்ள அவர்களது வீட்டில்தான் வசித்து வந்தனர். மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் என பலரும் இங்குதான் படித்து வளர்ந்தனர்.
என்.டி.ராமராவ் ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்ற உடன் தெலுங்குத் திரையுலகத்தை ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கேயே படப்பிடிப்பு நடக்கும் தெலுங்குப் படங்களுக்கு பல சலுகைகளை வழங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமும் ஐதராபாத் சென்றுவிட்டது. ஒரு சிலர் மட்டுமே இன்னமும் இங்கேயே உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை ஆந்திரா, தெலங்கானா என பிரித்தனர். இருந்தாலும் ஐதராபாத்தை விட்டு தெலுங்குத் திரையுலகினர் வேறு எங்கும் நகரவில்லை. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமராவதி நகரை ஆந்திராவின் தலைநகராக உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட உள்ளார்கள். அதனால், அமராவதி அதன் அருகில் உள்ள விஜயவாடா ஆகியவற்றை தெலுங்குப் படங்களுக்கான படப்பிடிப்பு இடங்களான மாற்றும் வேலைகளும் நடக்கும் எனத் தெரிகிறது.
தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பவன் கல்யாண் இன்னும் மூன்று படங்களை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. “ஓஜி, உஸ்தாத் பகத் சிங், ஹரிஹர வீர மல்லு” ஆகிய படங்களின் படப்பிடிப்பை அவர் இன்னும் முடிக்கவில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதால் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகே அப்படங்களின் படப்பிடிப்புகளில் அவர் மீண்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
அதற்குப் பிறகும் அந்தப் படங்களின் படப்பிடிப்பை அமராவதி அல்லது விஜயவாடா ஆகிய இடங்களில் அரங்கம் நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்த கேட்டுக் கொள்வார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆந்திராவிலும் திரைப்படத் தொழில் வளர அவர் முயற்சிப்பார் என்கிறார்கள். அங்கும் படப்பிடிப்பு நடத்தினால் சலுகைகள் வழங்கும் முடிவை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.