காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த வருடமே வெளியாகிவிட்டது. இந்தப் படம் காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறது என்று படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய டிரையம்ப் ஆப் தி சன் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் என்கிற இரண்டு நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டது என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில் இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை வாங்கியுள்ளது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது எதற்காக என்கிற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதேசமயம் கதை வேலைகள் முடிந்தாலும் ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு விஷன் தேவைப்படுவதால் இந்த நாவல்களை ராஜமவுலி வாங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.