அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் உமர் லுலு. ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு அடார் லவ், நல்ல சமயம், டமாக்கா , பேட் பாய்ஸ் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்பு தருவதாக கூறி ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒமர் லுலு இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்துவதாக அந்த நடிகைக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த நடிகை கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், படவாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி ஒமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ஒமர் லுலு மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.