'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே ஈகோ யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி இருந்தன. டிரைவிங் லைசன்ஸ் படத்தில் ஒரு பிரபல ஹீரோவுக்கும் அவரது தீவிர ரசிகனுக்கும் இடையே எதிர்பாராமல் ஏற்படும் ஈகோ மோதலையும், அய்யப்பனும் கோஷியும் படத்தில் ஒரு ஓய்வு பெற்ற இளம் ராணுவ அதிகாரிக்கும் ஓய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே வெடிக்கும் ஈகோ மோதலையும் பரபரப்பாக சொல்லி இருந்தார்கள். பொதுவாகவே இப்படி ஈகோ கான்செப்ட் உடன் வரும் படங்கள் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடும்.
அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் ‛தெக்கு வடக்கு' என்கிற புதிய படம் ஒன்று உருவாகிறது. ஜெயிலர் படத்தில் கலக்கிய வில்லன் நடிகர் விநாயகன் மற்றும் மலையாளத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக மாறிய சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இதில் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரேம் சங்கர் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் விநாயகன் ரைஸ் மில் ஓனராகவும், சுராஜ் ஈபி அதிகாரியாகவும் நடிக்கின்றனர். இந்த கதையும் ஈகோவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.