காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் புச்சி பாபு சனா டைரக்ஷனில் உருவாகி வரும் படம் ‛பெத்தி'. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் 2026 மார்ச் 27ம் தேதி படம் வெளியாகும் என முன்கூட்டியே அறிவித்து விட்டதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு சீராக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு பாடல் காட்சி ஒன்று மைசூரில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். ராம்சரண் உடன் இணைந்து ஆயிரம் டான்ஸர்கள் இதில் பங்கேற்று ஆடியுள்ளனர். அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் படத்தில் ஹைலைட்டாக பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.