காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் புச்சி பாபு சனா டைரக்ஷனில் உருவாகி வரும் படம் ‛பெத்தி'. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் 2026 மார்ச் 27ம் தேதி படம் வெளியாகும் என முன்கூட்டியே அறிவித்து விட்டதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு சீராக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு பாடல் காட்சி ஒன்று மைசூரில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். ராம்சரண் உடன் இணைந்து ஆயிரம் டான்ஸர்கள் இதில் பங்கேற்று ஆடியுள்ளனர். அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் படத்தில் ஹைலைட்டாக பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.