சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நடிகர் விநாயகனும் சர்ச்சையும் என்று சொல்லும் அளவிற்கு பிரபல மலையாள நடிகர் விநாயகன் அடிக்கடி ஏதாவது வில்லங்கம் செய்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். விஷால் நடித்த 'திமிரு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார்.
இவர் இப்படி படங்களில் நடித்து பிரபலமானதை விட அவ்வப்போது பொது இடங்களில், அது போலீசார் என்று கூட பார்க்காமல் யாரிடமாவது வம்பிழுத்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இப்படி ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் ஒரு கடைக்காரரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு அதன்பிறகு அவர் மீது அங்குள்ள காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட தனது அப்பார்ட்மென்ட்டில் இருந்து எதிரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் நபரை பார்த்து அநாகரிகமாக வார்த்தைகளில் திட்டியதுடன் தான் அணிந்திருந்த வேட்டியை கழற்றி கூட அசிங்கமான சைகை செய்தார் விநாயகன். பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்தும் வீடியோ வெளியிட்டார்.
இப்படி இரண்டு மாதங்கள் அமைதியாகப் போன நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லம் பகுதியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விநாயகன். அப்போது அங்குள்ள அஞ்சலம்மூடு என்கிற ஹோட்டலில் அவர் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தார். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பும்போது ஹோட்டல் நிர்வாகிகளுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் மது போதையிலும் இருந்தார்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்த போது, அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விநாயகன். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அதன் பிறகு அவரை ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் விநாயகன் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.