திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

'சித்தா' படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'வீர தீர சூரன்'. இதில் விக்ரம் கதாநாயகனாக, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (மார்ச் 27ம் தேதி) இப்படம் வெளியாகிறது.
அதேநாளில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 'எல் 2 எம்புரான்' படமும் வெளியாகிறது. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா வெளியீட்டாக வருவதால் அந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திலும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 'வீர தீர சூரன்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு, ''மார்ச் 27ல் நான் நடித்த இரு படங்களும் ரிலீசாகின்றன. இரு படங்களும் சிறப்பாக வந்துள்ளன. அப்படி பார்க்கையில் அன்றைய தினம் விக்ரமுக்கு ஒரு ஹிட், மோகன்லாலுக்கு ஒரு ஹிட். ஆனால் எனக்கு மட்டும் ரெண்டு ஹிட்'' என்றார்.




