மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார். ஒரு இசை அமைப்பாளராக திரையுலகில் ஏஆர் ரஹ்மான் அறிமுகமான காலகட்டத்தில் மலையாளத்தில் அவர் முதன்முதலாக இசையமைத்தது மோகன்லால் நடித்த 'யோதா' என்கிற படத்திற்குத்தான்.
இந்த நிகழ்வில் அது குறித்து நினைவு கூர்ந்த மோகன்லால், “30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஹ்மானின் இசையில் இங்கே பாடலை கேட்கிறேன். மலையாள திரையுலகில் மோகன்லாலின் தந்தை ஆர்.கே சேகரின் பங்களிப்பு ரொம்பவே அபரிமிதமானது. கிட்டத்தட்ட 500 படங்களில் (ஆர்கெஸ்ட்ரா) பணியாற்றியுள்ள அவர் அந்த சமயத்தில் 23 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் நான் நடித்த 'இருவர்' படத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்ததும் அவருடன் ஆராட்டு படத்தில் இணைந்து நடித்ததும் மறக்க முடியாத அனுபவங்கள்” என்று கூறியுள்ளார்.