பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார். ஒரு இசை அமைப்பாளராக திரையுலகில் ஏஆர் ரஹ்மான் அறிமுகமான காலகட்டத்தில் மலையாளத்தில் அவர் முதன்முதலாக இசையமைத்தது மோகன்லால் நடித்த 'யோதா' என்கிற படத்திற்குத்தான்.
இந்த நிகழ்வில் அது குறித்து நினைவு கூர்ந்த மோகன்லால், “30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஹ்மானின் இசையில் இங்கே பாடலை கேட்கிறேன். மலையாள திரையுலகில் மோகன்லாலின் தந்தை ஆர்.கே சேகரின் பங்களிப்பு ரொம்பவே அபரிமிதமானது. கிட்டத்தட்ட 500 படங்களில் (ஆர்கெஸ்ட்ரா) பணியாற்றியுள்ள அவர் அந்த சமயத்தில் 23 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் நான் நடித்த 'இருவர்' படத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்ததும் அவருடன் ஆராட்டு படத்தில் இணைந்து நடித்ததும் மறக்க முடியாத அனுபவங்கள்” என்று கூறியுள்ளார்.




