பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
பெரும்பாலும் பிரபல ஹீரோக்கள் தங்களது படங்களின் ரிலீஸ் சமயத்தில் பேசும்போது, குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். நடிகர் பிரித்விராஜும் தனது படங்களுக்கு அப்படித்தான் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் தான் நடித்த படங்களை இதுவரை தனது மகளுக்கு காட்டியது இல்லை என்கிற ஒரு ஆச்சரியமான தகவலையும் அவர் சமீபத்தில் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “நான் நடித்த படங்களை இதுவரை ஒன்பது வயதான என் மகளுக்கு காட்டியதில்லை. காரணம் அவள் படம் பார்க்கும்போது அதன் ஹீரோவாக என்னை பார்க்க மாட்டாள். ஒரு தந்தையாக தான் படத்திலும் என்னை பார்ப்பாள். அது அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் இதை கடைபிடித்து வருகிறேன்.
அதேசமயம் தற்போது நான் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் இதிலிருந்து ஒரு விதிவிலக்கு என்று சொல்லலாம். காரணம் இந்த படத்தை என் மகள் பார்க்கும்போது உண்மையான சினிமா என்ன என்கிற அனுபவத்தை உணர்ந்து கொள்வாள் என்கிற நம்பிக்கையும் தொழில் ரீதியாக நான் ஒரு நடிகர் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணமும் தான் காரணம்” என்று கூறியுள்ளார்.