‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

பெரும்பாலும் பிரபல ஹீரோக்கள் தங்களது படங்களின் ரிலீஸ் சமயத்தில் பேசும்போது, குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். நடிகர் பிரித்விராஜும் தனது படங்களுக்கு அப்படித்தான் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் தான் நடித்த படங்களை இதுவரை தனது மகளுக்கு காட்டியது இல்லை என்கிற ஒரு ஆச்சரியமான தகவலையும் அவர் சமீபத்தில் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “நான் நடித்த படங்களை இதுவரை ஒன்பது வயதான என் மகளுக்கு காட்டியதில்லை. காரணம் அவள் படம் பார்க்கும்போது அதன் ஹீரோவாக என்னை பார்க்க மாட்டாள். ஒரு தந்தையாக தான் படத்திலும் என்னை பார்ப்பாள். அது அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் இதை கடைபிடித்து வருகிறேன்.
அதேசமயம் தற்போது நான் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் இதிலிருந்து ஒரு விதிவிலக்கு என்று சொல்லலாம். காரணம் இந்த படத்தை என் மகள் பார்க்கும்போது உண்மையான சினிமா என்ன என்கிற அனுபவத்தை உணர்ந்து கொள்வாள் என்கிற நம்பிக்கையும் தொழில் ரீதியாக நான் ஒரு நடிகர் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணமும் தான் காரணம்” என்று கூறியுள்ளார்.