20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சவுமியா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியா ஷெட்டி தனது தோழி வீட்டில் ஒரு கிலோ வரை தங்க நகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தொண்டபர்த்தியில் வசிக்கும் பிரசாத் பாபு என்பவர் வீட்டில் ஒரு கிலோ 750 கிராம் தங்கம் திருட்டு போனது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நடிகை சவுமியா ஷெட்டி நகைகளை திருடியது தெரிய வந்தது.
பிரசாத் பாபுவின் மகள் மவுனிகாவுடன் நட்பை ஏற்படுத்தி அவரது வீட்டுக்கு சவுமியா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பீரோ சாவியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவாவில் தங்கி இருந்த சவுமியா ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 74 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.